1 4 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை

Share

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை

மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும் வர்த்தகர் ஒருவரின் புகைப்படத்தை, கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றில் மோசடிகும்பல் பதிவிட்டு குறித்த கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பேக்கரி உரிமையாளர் என அடையாளப்படுத்திக்கொண்ட குறித்த கும்பல் அந்த இலக்கத்தின் ஊடாக அவருடைய நண்பர்களை தொடர்புகொண்டு தான் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடன் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அவரின் புகைப்படம் பதிவிட்ட போலி இலக்கத்திற்கு 22 ஆயிரம் ரூபாவை நண்பர்கள் அனுப்பியுள்ளார்.

இதன் பின்னர் போலி கையடக்க தொலைபேசி இலக்கம் மூலம் மோசடியாக பணம் கொள்ளையிட்டதை அறிந்து கொண்ட வர்த்தகர் மற்றும் அவரின் நண்பர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த மோசடி கும்பல் தொடர்பான விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்துவருவதுடன் இவ்வாறான மோசடி கும்பல் செயற்பட்டு வருவதாகவும் அவர்களிடம் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...