3 5 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

Share

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

தேசபந்து தென்னகோன் இலங்கையின் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கை பொலிஸ் படையில் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோசன் பாதுக்க மற்றும் குழு உறுப்பினர் ஆனந்த பாலித ஆகியோர் தமது மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளனர்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதியினால் தேசபந்து தென்னகோன் பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டமை, சட்ட விதிகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பு விதிகளை மீறும் செயலாகும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...