tamilnaadi 54 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பால் செலவாகும் 232 மில்லியன்

Share

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பால் செலவாகும் 232 மில்லியன்

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு மாதாந்தம் 232 மில்லியன் ரூபா கூடுதல் செலவாகும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

குறித்த கூட்டமானது, நேற்றைய தினம் (06.03.2024) இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சாதாரண பிரஜைகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த வேளையில் தமது சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றது என கட்சித் தலைவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கி அதிகாரிகள் சம்பள உயர்வைப் பெறுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதிலும் கூட, இந்த நாட்டிலுள்ள மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலையில் அவர்கள் சம்பள உயர்வைக் கைவிட்டிருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கருதுவதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் திணைக்களத்தில் கூட்டு ஒப்பந்தம் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த சம்பள உயர்வு சட்டவிரோதமானது என கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே மத்திய வங்கி ஒரு சுயாதீன அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தமது சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல எனவும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு கட்சி தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, முன்னதாக வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...