tamilnaadi 19 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமரின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம்

Share

பிரதமரின் உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் குழப்பம்

பிரதமர் தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின் இறுதிச் சடங்கிற்கு பிரதமர் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடலில் இருந்து பலத்த காற்று வீசியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் விளக்கமளித்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு, பானங்கள் பெற்றுக்கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், உலங்குவானூர்தி சரியான முறையில் தரையிறக்கப்படாமைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறுதிச் சடங்குகள் பல முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், மாத்தறை பகுதியை விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், உலங்குவானூர்தியிலிருந்து பத்திரமாக தரையிறங்கிய பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி சடங்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...