தமிழகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற சாந்தனின் இறுதி அஞ்சலி
தமிழகத்தில் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு சாந்தனின் உடலை கொண்டுவருவதற்கு முன்னர் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் காலமானார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சிகளின் தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.