19 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து

Share

பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கடமைகளை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.

பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுக் கொண்ட தேசபந்து தென்னக்கோன் இதுவரையில் வகித்து வந்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மகேஸ் சேனாரட்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை பொலிஸார் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சர்வதேச அணுகுமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....