இலங்கைசெய்திகள்

வெறிச்சோடிக் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்

tamilni 616 scaled
Share

வெறிச்சோடிக் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்படவிருந்த மூன்று ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த MH 178 விமானமும், காலை 7.25 மணிக்கு இந்தியாவின் ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் UL 177 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காலை 8.55 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்ல வேண்டிய UL 181 என்ற விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிக்கல் நிலை காரணமாக நேற்று 7 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் தொடர் விமான தாமதம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த காலதாமதத்தால், தாய்லாந்தில் புனித யாத்திரை சென்ற மக்கள் குழுவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்னும் சில நாட்கள் ஆகும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....