tamilni 566 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

Share

பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும்

பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றி பெறும். தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக இருக்கின்றது.

ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சியை நாங்கள் அமைதியாக பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனை அறியாத பல்வேறு கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய நிலைமை ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தைப் போன்றது. பந்தயத்தின் தொடக்கத்தில் முயல் முன்னிலையில் இருந்த போதிலும் இறுதியில் ஆமை வென்றது போன்று மொட்டு கட்சியும் இறுதியில் வெற்றி பெறும். நாட்டுப்புறக் கதையில் பந்தயத்தின் நடுவில் முயல் உறங்கியதே அது தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் உண்மையில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆமைக்கே உரித்தான உத்திகள் இருந்தமையால் ஆமை வென்றது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...