tamilnih 40 scaled
இலங்கைசெய்திகள்

20 வீதத்திற்கும் மேல் மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரை

Share

20 வீதத்திற்கும் மேல் மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரை

மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின் கட்டணத்தை 33 வீதத்தால் குறைக்க முடியும் என ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மின் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க ஆணைக்குழுவிடம் மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இதேவேளை மின்சார வாரியத்தின் 18 வீதம் மற்றும் உண்மையில் குறைக்கக்கூடிய விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 20 வீதத்திற்கும் மேலாக கட்டணங்களைக் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது.

இதேநேரம் துண்டிக்கப்பட்ட பின் மீண்டும் மின் இணைப்பை ஏற்படுத்த அறவிடப்படும் 3000 ரூபா கட்டணத்தை 1500 ரூபாவாக குறைக்கவும் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கடந்த 21ஆம் திகதி உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.

அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...