tamilnih 37 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

Share

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்‌ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கிச் செயற்படும் நாமல் ராஜபக்‌சவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள் தொடர்பில் பசில் நேரடியாக தலையிட்டு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதனையேற்று நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்‌ச, எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடிக் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...