இலங்கைசெய்திகள்

விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் தொடர்பில் தகவல்

tamilni 512 scaled
Share

விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் தொடர்பில் தகவல்

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளம் உதவி விரிவுரையாளரின் மூளை செயலிழந்ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய 27 வயதுடைய லக்மினி போகமுவ, அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.

பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியொன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேலைக்கு செல்வதற்காக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் செல்ல முயன்ற போது, ​​பத்தரமுல்லை பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச்சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரசிறி போகமுவவின் ஒரே பிள்ளையான லக்மினி போகமுவ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த யுவதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும், இறப்பதற்கு முன்னர் திருமண மோதிரங்களும் ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....