tamilnid 12 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

Share

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும் அணுசக்தி நிபுணர் ஹலீல் அவ்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகளின் சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.

அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்கும் முன் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஒரு நாட்டில் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன என்றும், அதில் முதலாவது உறுதியான சட்டப் பின்னணியை ஏற்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்க வேண்டுமா? அல்லது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக அணுசக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை,ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமையின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
632482948 1401422515360507 8840792616751761572 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை! – கரன்தெனிய சுத்த பின்னணியில் உள்ளாரா? பொலிஸார் சந்தேகம்!

கொழும்பு – அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் இன்று (13) மாலை...

Screenshot 2026 02 14 121516
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் ட்ரம்ப் குறித்த விவாதம்: மகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் குறித்த அரசியல் விவாதத்திற்குப்...

Airfares to Colombo surge after Pakistan Govt gives go ahead for India T20 World Cup clash
விளையாட்டுசெய்திகள்

கொழும்பில் கால்பதித்தது இந்திய அணி! – கட்டுநாயக்கவில் விசேட பாதுகாப்புடன் உற்சாக வரவேற்பு!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியத் தேசிய கிரிக்கெட் அணி நேற்றிரவு...

1695813008 GAVEL3 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் கொடூரமான படுகொலை தொடர்பான...