tamilnid 11 scaled
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிக்கல்

Share

அரச நிறுவனங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் சிக்கல்

அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி செயற்படுவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட விருப்புக்கேற்ப செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே அரச நிறுவனங்களில் இந்த நிலைமைகளை தடுக்கும் வகையில் மக்களுடன் நெருக்கமாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நேற்று (19) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த செயலமர்வில் மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த சிறப்பு செயலமர்வில், மக்களுக்கு திறமையான மற்றும் நட்பு ரீதியான சேவையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...