tamilni 303 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை விமானப்படையின் திட்டங்கள்

Share

வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை விமானப்படையின் திட்டங்கள்

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, வடக்கு மாகாணத்தில் “நட்பின் சிறகுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியான திட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மார்ச் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, 125 மில்லியனுக்கும் அதிகமான நிதி மதிப்புடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள 73 பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக அடையாளங்காணப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் பாடசாலைகளுக்கு 73,000 பள்ளி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டங்களுக்கு அரச நிதி பயன்படுத்தப்படாது என்றும், அனைத்து நிதியும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் என்றும் விமானப்படைத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மார்ச் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஆண்களுக்கான 650 கிலோமீற்றர் தூர ஈருருளி சவாரி, காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையும். அதேவேளை, பெண்களுக்கான போட்டி 100 கிலோமீற்றர் தூரத்துக்கு நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, விமானப்படையானது மார்ச் 6 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது.

இதன்போது, இந்திய விமானப்படை மற்றும் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...