tamilni 322 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மூன்று புதிய சர்வதேச பல்கலைக்கழகங்கள்

Share

இலங்கையில் மூன்று புதிய சர்வதேச பல்கலைக்கழகங்கள்

இலங்கைக்குள் மூன்று சர்வதேசப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தற்போது ஸ்தாபிப்பு கட்டத்தில் உள்ள நிலையில் மூன்றாவது பல்கலைக்கழகம் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கண்டியில் திறக்கப்பட உள்ளதோடு மற்ற இரண்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்த கிளைகளைக் கொண்டவையாகும்.

இந்தநிலையில் அரச பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்களை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் 10 பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் கல்வி நிலைமையை அவதானித்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...