tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Share

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

புத்தளம் – ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் தனிப்பட்ட பிணக்கு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக ஆனமடுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...