tamilni 41 scaled
இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் பயணித்தால் அபராதம்

Share

நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் பயணித்தால் அபராதம்

நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணிக்காமல் குறைந்த வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தற்போதைய அதிகபட்ச வேகமான மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்ச வேகத்தை மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் அறிமுகப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்துகள் ஏற்படும் வகையில் குறைந்த வேகத்தில் பயணிக்கும் சாரதிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் குறைந்தபட்ச வேக வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...