tamilni 375 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

Share

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

குவைத் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொது மன்னிப்பு அமுலுக்கு வருகிறது.

பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 முதல் ஜூன் 17 வரை என மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அபராதம் செலுத்தி ஆவணங்களை சட்டப்பூர்வமாக்கவோ வாய்ப்பளிக்கும் வகையில் இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான Sheikh Fahad Yousef Al Sabah இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த முடிவு இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

இதன் மூலம் குவைத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியும்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொதுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் தற்போது 1,10,000 சட்ட விரோதமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு காட்டுகிறது.

அவ்வாறு சட்ட விரோதமாக இருப்பவர்கள் இந்த பொது மன்னிப்பைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்களின் விசாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தில், சட்டவிரோதமாக குடியிருப்போர் அபராதம் அல்லது தண்டனை இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். அப்படிப்பட்டவர்கள் வேறு வேலை விசாவில் மீண்டும் குவைத்துக்கு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் தங்க விரும்புவோர் அபராதம் செலுத்துவதன் மூலம் தங்கள் விசா ஆவணங்களை சரிபார்க்கலாம். அதிகபட்ச அபராதம் 600 தினார் வரை இருக்கும்.

நிதி வழக்குகளில் பயணத் தடையை எதிர்கொள்பவர்கள், அந்த வழக்கு தீர்க்கப்பட்ட பின்னரே நாட்டை விட்டு வெளியேற முடியும்.

இதற்கு முன்னதாக குவைத்தில் பொது மன்னிப்பு ஏப்ரல் 2020-இல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...