tamilni 7 scaled
இலங்கைசெய்திகள்

செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கு அறிவிப்பு

Share

செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கு அறிவிப்பு

செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினரின் இடங்களை தாக்கும் பங்கேற்கும் அனைத்து போர்க்கப்பல்களும் தங்களது தாக்குதலுக்கு இலக்காகும் என்றும் ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை காரணமாக செங்கடலில் பயணம் செய்யும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அது உலக சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...