tamilni 469 scaled
இலங்கைசெய்திகள்

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு

Share

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு

வலிப்பு நோய்க்கு எதிரான சோடியம் வோல்ப்ரோயேட் 100 மில்லி கிராம் மாத்திரைகளுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களில் “போலி” பதிவு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் என்.எம்.ஆர்.ஏ என்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம், குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாட்டை செய்துள்ளது.

இதனையடுத்து உள்ளூர் உற்பத்தியாளரால் தயாரிக்கப்படும் இந்த வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த மாத்திரையின் உள்ளூர் உற்பத்தி நிறுவனமான, நியூஜென் லங்கா ஹெல்த்கேர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமும் இது தொடர்பில் தமது முறைப்பாட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் அளித்துள்ளது.

ஏற்கனவே போலியான இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் ஏராளமான ஆவணங்கள் என்.ஆர்.எம்.ஏக்கு சரி பார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில் “கொஸ்ட்ரோ – ரெசிஸ்டண்ட் சோடியம் வொல்ப்ரோயேட் மாத்திரை 100 மில்லி கிராமுக்காக நியூஜென் லங்காவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பதிவுச் சான்றிதழில் முரண்பாடுகளைக் கண்டறிந்ததை அடுத்தே புதிய பிரச்சினை வெளியாகியுள்ளது.

சோடியம் வோல்ப்ரோயேட் 200 மில்லி கிராம் மாத்திரைகளுக்கு மட்டுமே நியூஜெனிடம் செல்லுபடியாகும் உரிமம் இருப்பதாக என்.ஆர்.எம்.ஏ கண்டறிந்துள்ளது.

அதேநேரம் 100 மில்லிகிராமுக்கு உரிமம் கோரி தமது நிறுவனம் விண்ணப்பித்திருந்தபோதும், அது இன்னும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள நியூஜென் நிறுவனம், தம்மால் ஆவணம் எதுவும் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போலிச் சான்றிதழ், “உண்மையான நகல்” என்று ஒரு சட்டத்தரணி ஒருவரால் சான்றளிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து என்.ஆர்.எம்.ஏ நிறுவனம் சோடியம் வொல்ப்ரோயேட்டின் அனைத்து வலிமை கொண்ட மாத்திரைகளையும் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கு மத்தியில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவு கோப்புகளில் இருந்த போலி ஆவணம் எப்படி அங்கு வந்தது என்பதும் யார் அதனை சமர்ப்பித்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...