tamilni 465 scaled
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வலைவீச்சு

Share

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வலைவீச்சு

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் ​போது அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வலைவீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சிக்கு கட்சி மாறினால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து ஆசை காட்டப்பட்டுள்ளது.

தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நான்கு முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்கு தாவும் தீர்மானம் தொடர்பில் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...