tamilnaadi 90 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

Share

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவை தொடர்ந்து இன்றைய தினம் 11 மணியளவில் திருகோணமலையில் வைத்து ஏனைய தெரிவுகள் நடைபெறவுள்ளன.

தலைவர் தெரிவின் போது பொது சபையில் பங்குபற்றியவர்களே இன்றைய நிகழ்விலும் பங்குபற்றுவார்கள்.

இதற்கு முன்னர் ஏற்கனவே இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்,முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

இதன்பின்னர் செயலாளர்,துணை செயலாளர், துணை தலைவர்கள் என்ற வகையில் சுமார் 33 பேர் மத்தியகுழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கு பின்னர் நான் செயலாளராக ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்தேன். இதற்கு பலரும் நான் ஏன் அவரை முன்மொழிய வேண்டும் என கேட்டனர்.அதற்கு காரணம் இருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு இறுதியை இடம்பெற்ற தேசிய மாநாட்டின் போது,பொதுச்செயலாளராக எனது பெயரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்திருந்தார்.அதனை எவருமே வழிமொழியவில்லை.

காரணம் ஏற்கனவே இருந்தவர்களை,தலைவர், செயலாளராக அமர்த்த அனைவரும் விரும்பினார்கள் அதனால் நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.

இப்போது எனக்கெதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதாவது நான் செயலாளராக வர முயற்சிக்கிறேன்,அதனால் தான் தலைவர் தெரிவில் சிறீதரனை ஆதரித்தேன் என கூறுகின்றனர்.அதை முறியடிக்கவே நான் தலைவர் தெரிவுக்கு முன்பாகவே ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்திருந்தேன்.

இன்றைய செயலாளர் தெரிவிலும் மட்டக்களப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனை தெரிவு செய்யவே அங்கு இருப்பவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கமைய இன்றைய மத்தியகுழு கூடத்திற்கும் இந்த முடிவு செல்லவுள்ளது. எனவே நிச்சயமாக போட்டிகளின்றி சிறீநேசனை பொதுச் செயலாளராக தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...