tamilnig 14 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

Share

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 1.6 வீதத்தால் அதிகரித்துள்ளமையால் பணவீக்கம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், உணவு அல்லாத பொருட்களின் விலை நவம்பரில் 7.1 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 6.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பின் ஆதரவுடன், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணவீக்கம் குறையத் தொடங்கியது, ஆனால் இந்த நிதியம் நிர்ணயித்த வருவாய் இலக்குகளை எதிர்கொள்ள இலங்கை பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், ஜனவரி முதல் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும். ஜனவரி இறுதியில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 69806d6b7f392
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மயிலிட்டியில் சோகம்: இராணுவ வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த...

1770042557 images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியக் கடலோரக் காவல்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இலங்கை மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய மனிதாபிமானமற்ற...

f255d14dbc86150d596e80f2fed4b9cb
செய்திகள்உலகம்

பாம்புக்கடி: ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு உயிர் பறிபோகிறது – அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out...

image ac09cfb2fa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெப்ரவரி 10 முதல் நிச்சயமாக 1,750 ரூபா சம்பளம்! – பிரதி அமைச்சர் பிரதீப் ஹட்டனில் உறுதி.

தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் எவ்விதப் போராட்டங்களுமின்றி...