tamilnig 14 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

Share

இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 1.6 வீதத்தால் அதிகரித்துள்ளமையால் பணவீக்கம் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், உணவு அல்லாத பொருட்களின் விலை நவம்பரில் 7.1 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 6.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பின் ஆதரவுடன், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணவீக்கம் குறையத் தொடங்கியது, ஆனால் இந்த நிதியம் நிர்ணயித்த வருவாய் இலக்குகளை எதிர்கொள்ள இலங்கை பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், ஜனவரி முதல் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும். ஜனவரி இறுதியில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...