tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

Share

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் ஏற்றுமதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மேற்கு ஆசியப் பிராந்தியம் உள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த வருடம் இந்த நாட்டில் ஏற்பட்ட பெரிய வெங்காய நெருக்கடியை அடுத்து பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரான் இலங்கை தேயிலையின் பிரதான ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்தார்.

ஏற்றுமதி இறக்குமதிக்கு கடும் நெருக்கடி நிலையை இலங்கை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நெருக்கடி நிலைமைக்கு பதிலளிப்பதில் இலங்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...