tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

Share

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் ஏற்றுமதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மேற்கு ஆசியப் பிராந்தியம் உள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த வருடம் இந்த நாட்டில் ஏற்பட்ட பெரிய வெங்காய நெருக்கடியை அடுத்து பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரான் இலங்கை தேயிலையின் பிரதான ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்தார்.

ஏற்றுமதி இறக்குமதிக்கு கடும் நெருக்கடி நிலையை இலங்கை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நெருக்கடி நிலைமைக்கு பதிலளிப்பதில் இலங்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...