tamilnih 40 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பு, யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு

Share

நாடாளவிய ரீதியில் டெங்கும் பரவும் அபாயம் உள்ள இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம் செய்யும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

சுத்தம் செய்யப்படும் பகுதிகள், வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான உரிமையாளர்களிடம் அதற்கான பணத்தை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநி்லை காரணமாக டெங்கு தொற்று வேகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அந்த எண்ணிக்கை 1871 ஆகும்.

நேற்று மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 384 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 351 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 203 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள டெங்கு விரைவு மருத்துவ பிரிவுகளின் எண்ணிக்கை 71 என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...