tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இத்தாலி அனுப்புவதாக நூற்றுக்கணக்கான இலங்கையர்களை ஏமாற்றியவர் கைது

Share

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா அல பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த சில தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொகுசு வாகனங்களை பயன்படுத்தி மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இவர், அவ்வாறே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் கைது செய்யப்பட்ட போது, ​​06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்று கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...