tamilni 46 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி ஏற்றதும் வாக்குறுதிகளை மறந்து விடும் இலங்கை ஜனாதிபதிகள்

Share

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் ஜனாதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் அதனை மறந்து விடுவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.

தான் மாநாயக்க தேரராக பதவி ஏற்றுக்கொண்ட கடந்த இருபது ஆண்டுகளாகவே இந்த நிலைமை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக தம்மிடம் வாக்குறுதி அளித்த ஜனாதிபதிகள் எவரும் பதவி ஏற்றதன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டு தேர்தலின் பின்னர் வழமை போன்று அந்த விடயம் இருட்டடிப்புச் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...