tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

சஜித் கூட்டணியில் இணையும் மொட்டுக்கட்சியினர்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும் வெளியேறிய பின் அவர்கள் அங்கம் வகித்த அணியின் தலைவரான டளஸ் அழகப்பெரும இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த கூட்டணியின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, தாம் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...