tamilni 507 scaled
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை

Share

அரசியலமைப்பின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு தற்போது, முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஆண்டு தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் பெப்வரி முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது.

எனினும், இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதனால் ஆணைக்குழுவானது அப்பணியை முற்கூட்டியே ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 17
செய்திகள்இலங்கை

உஸ்வெட்டகெய்யாவவில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக...

1735875275 matara prison 6
செய்திகள்இலங்கை

விடுதலையாக இன்னும் 5 நாட்களே இருந்த நிலையில் விபரீதம்: மாத்தறையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து கைதி தப்பியோட்டம்!

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தென் மாகாணத்திற்குப்...

1769831545 dead 6
செய்திகள்அரசியல்இலங்கை

கையடக்கத் தொலைபேசி தகராறு: 14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில்...

4680497 2145223106
செய்திகள்உலகம்

கொங்கோவில் பயங்கரம்: சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – உலகளாவிய கோல்டன் உற்பத்தியில் பாதிப்பு!

கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ருபாயா (Rubaya) சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட...