tamilni 199 scaled
இலங்கைசெய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி யார் தெரியுமா

Share

2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி யார் தெரியுமா

இந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார்.

71வது உலக அழகி கிரீடம் இந்தியாவின் மும்பையில் நேற்று (09) இரவு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.

லெபனானை சேர்ந்த யாஷ்மினா ஜைடவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.

28 வருடங்களின் பின்னர் போட்டியை நடத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 வயதான சினி ஷெட்டி போட்டியின் முதல் 08 பேரில் தெரிவாகியமை விசேட அம்சமாகும்.

மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார்.

காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த 2024ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த, கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...