tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Share

ஜனவரி மாதம் முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பெட்ரோலின் விலை அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திய போது, ​​ முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...