rtjy 123 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

Share

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

இலங்கையில் கோவிட் புதிய திரிபினை கண்டறிவதற்கு தேவையான போதிய வசதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் ஜே.என்.1 இலங்கைக்குள் பரவியிருக்கலாம் என சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பிலான பரிசோதனைகளை நடாத்தக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பணியாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கோவிட் பரிசோதனை நடத்தக்கூடிய ரெபிட் என்டிஜன் உபகரணங்கள் மருத்துவ விநியோகப் பிரிவின் கையிருப்பில் உள்ள போதிலும், அவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் புதிய கோவிட் திரிபு பரவி வரும் நிலையில், இலங்கையில் இந்த திரிபு கிடையாது என உறுதிபடுத்தி எவராலும் கூற முடியாது எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கோவிட் திரிபினால் சில நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கை சுகாதாரத் துறையினர் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயக்கம் காட்டி வருவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...