tamilni 40 scaled
இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

Share

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் கருத்தைக் கேட்காமல் தனது சுய கருத்தை மாத்திரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றில் கூடியது.

“எதிர்க்கட்சித் தலைவர் மீது அரசாங்கம் பெரும் சுமையை சுமத்தி வருகிறது. அவர் எங்கள் தலைவர். வேறு யாரும் இல்லை” என கூட்டத்தின் தொடக்கத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் கூறியதையடுத்து, உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இதன்போது “சஜித் பிரேமதாச தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என பேசுவதாலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத் தலைவர்களுடன் முரண்படுவது நல்லதென்றாலும், சனத் நிஷாந்த, பிரசன்ன ரணவீர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முரண்படுவது நல்லதல்ல எனவும் கட்சியின் உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, விளம்பரத்தை தேடக் கூடாது என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...