tamilni 396 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை உடனடியாக சந்திக்கவுள்ள ஐசிசி தலைவர்

Share

இலங்கை கிரிக்கெட் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் தடை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே உடனடியாக இலங்கை வர காத்திருப்பதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் மீதான தடையை நீக்குமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திக்கு பதிலளிக்கும் போதே இந்த அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழுவின் இரு அதிகாரிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இலங்கை கிரிக்கெட் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அதிகாரிகள் சற்று நிவாரணம் வழங்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இரு அதிகாரிகளும் இரண்டு காரணங்களை முன்வைத்து அதனை எதிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரக்பி, கால்பந்தாட்டம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை அனுபவத்தில் அறிந்த குறித்த இருவருமே, கிரிக்கட் இடைக்கால குழு நியமிக்கப்பட்ட பின்னரும் கலைக்கப்படாமல் இருந்தமையினால் இவர்கள் இருவருமே எதிர்ப்பதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...