rtjy 203 scaled
இலங்கைசெய்திகள்

விஷம் அருந்திவிட்டு சென்ற மாணவனால் சர்ச்சை

Share

விஷம் அருந்திவிட்டு சென்ற மாணவனால் சர்ச்சை

பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவரே நேற்றையதினம்(21.11.2023) இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர்கள் பலர் தன்மையும், தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக மாணவன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மரக்கறி செய்கைக்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்ததாகவும், இதை அறிந்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாகவும், இதன்பின்னர் மாணவன் வட்டவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...