tamilni 323 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் குற்றச்சாட்டு

Share

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் குற்றச்சாட்டு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் வற் வரி ஏய்ப்பு செய்ததற்காக குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழு, விசாரணையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்தின் கணக்காய்வு அறிக்கைகளை கோபா குழு ஆய்வு செய்ததாக, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதன்போது வற் வரியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி இறக்குமதிகள் குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாட்டில் ஏராளமான நிர்வாக குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வரி ஏய்ப்பின் அடிப்படையில், 187 மில்லியன் ரூபா குறைந்த கட்டணமாக அறவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின்படி, கிழக்கு மாகாணத்தில் நீர் அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படும் களஞ்சியத்துக்கு போலியான உள்ளூர் தகவல்கள் தயாரிக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு பெரும் தொகை நிதி கிடைக்கச்செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தனியார் நிறுவனம், 5,139,621 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கையிருப்புக்களை களஞ்சியத்தில் வைத்திருந்தது.

எனினும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் 6,350,364 அமெரிக்க டொலர்கள் கையிருப்புகள் மாத்திரமே காட்டப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நிறுவனத்திற்கு மேலதிகமாக 1,210,743 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...