rtjy 163 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு கிளை நிர்வாகத்தில் மாற்றம்

Share

இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு கிளை நிர்வாகத்தில் மாற்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளைக்கான புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் நேற்று (13.11.2023) இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மீண்டும் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளராக மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன், உபதலைவர்களாக 1.செ.திருச்செல்வன் 2. க.நித்தியானந்தம், உபசெயலாளராக பத்மினி சதானந்தன், பொருளாளராக ப.பரமேஸ்வரன் மற்றும் உபபொருளாளராக சி.கந்தசாமி. ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உரையாற்றுகையில்,

தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழரச கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். தமிழ் பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடப்பாண்டு நிர்வாக குழு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய தலைமுறையில் இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தி பல்வேறு வெற்றிகரமான வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் புதிய நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...