rtjy 140 scaled
இலங்கைசெய்திகள்

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

Share

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயல்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே கீரி சம்பாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது அரிசி மாபியாக்களினால் செயற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடாகும்.

கடந்த சிறுபோகத்தில் கீரிசம்பா அறுவடை குறைவடைந்திருந்த போதும் அதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையின் போது பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.

அதனால் போதுமான வகையில் கீரிசம்பா கையிருப்பில் இருக்கிறது. அத்துடன் இம்முறை பெரும்போகத்தின் போதும் அதிகமாக கீரி சம்பா உற்பத்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கியுள்ளேன்” என்றார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...