rtjy 138 scaled
இலங்கைசெய்திகள்

நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன்

Share

நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன்

நீதிமன்றம் சென்று சொந்த பணத்தையேனும் செலவு செய்து இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நிலைமையை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நாட்டைக் காட்டிக்கொடுத்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அமைப்பு உருவாக்கப்பட்டால், ஜனாதிபதி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நாளை கோரவுள்ளேன். இதைத் தடை செய்ய அடித்தளமிட்டவர்கள் வழங்கிய சாட்சியம் என்ன? அதைச் செய்து நம் நாட்டில் கிரிக்கெட்டை அழிக்க முயன்றது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என அவரிடம் கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...