tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

Share

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பனவும் நடைபெறுமென அமெரிக்கா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவை அனைத்தும் மக்களுக்கு குரல் கொடுக்கின்றன, வாக்குப்பெட்டியின் மூலம் தங்கள் கருத்தைக் கூற முடியும் மற்றும் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பின்னரும் தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

அத்துடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...