rtjy 49 scaled
இலங்கைசெய்திகள்

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

Share

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க 700 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக பாதாள உலக பிரமுகர்கள் தனது சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இன்னும் பெரிய தொகை பணத்தை கொடுக்க அவர் தயாராக இருப்பதாக அமைச்சர் அலஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவுவதும் குற்றச் செயல்கள் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...