tamilni 4 scaled
இலங்கைசெய்திகள்

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்ற தாய் யானை தாக்கி பலி

Share

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்ற தாய் யானை தாக்கி பலி

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (50 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மகனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...