tamilni 10 scaled
இலங்கைசெய்திகள்

ஹம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு ஆலை!

Share

ஹம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு ஆலை!

ஹம்பாந்தோட்டையில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக, சீனாவின் சினோபெக் நிறுவனம், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரையில், சீன முதலீடான கொழும்பு போர்ட் சிட்டி, இலங்கையில் மிகப்பெரிய நேரடி முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆழ்கடல் துறைமுகமாகும்.

இருப்பினும், துறைமுகம் 2017 ஆம் ஆண்டில் சீன அரசுக்கு சொந்தமான ‘சீனா மெர்ச்சன்ட்ஸ்’ நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற சீன விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சினோபெக் குழுமத்தின் தலைவர் மா யோங்ஷெங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சினோபெக் ஏற்கனவே இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையிலும் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...