rtjy 340 scaled
இலங்கைசெய்திகள்

போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

Share

சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(30.10.2023) நண்பகல் 12 மணியளவில் இடம்பெறும் என அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள அதிகரிப்பை கோரியே நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அந்த சங்கங்களின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவை மற்றும் மாகாண அரச சேவை என பல சங்கங்களின் அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...