5 10 scaled
இலங்கைசெய்திகள்

காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் பயங்கரம்

Share

காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் பயங்கரம்

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய எஸ்.சதுரிகா என்ற யுவதி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை 24 வயதுடைய ஆர்.குமாரசிறி என்ற இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...