rtjy 182 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்

Share

இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்

இலங்கையின் எதிர்கால கடன் தவணைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த சில தினங்களில் உடன்படிக்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடனாளிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடல்களின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் சாதகமாக பதிலளிக்கும் என அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.

மொரோக்கோவில் நடைபெற்ற உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையுடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு நெருக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு விவாதங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு இந்த வாரத்தில் இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு வைத்துள்ளது. ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்திடம் யோசனைகள் முன்வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த 2ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...