இலங்கைசெய்திகள்

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

rtjy 172 scaled
Share

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகிய உத்தேச சட்ட வரைவுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்கும் வகையிலானது எனவும், மனித உரிமைகளை வரையறுக்கும் வகையிலானது எனவும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் அமைதியாக ஒன்று கூடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகள் ஏற்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பயங்கரவாதம் என்ற பதம் விரிவாக வரைவிலக்கணப்படுத்தபட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்பினரையும் நிறுத்தி விசாரணை நடத்தி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய பாதுகாப்புச் சட்ட வரைவின் உள்ளடக்கமானது கருத்துச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலானது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
3 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய...

5 9
இலங்கைசெய்திகள்

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும்...

4 9
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்! சாணக்கியன்

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்...

1 8
இலங்கைசெய்திகள்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி...