tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கை

Share

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு பொதுஜன முன்னணி எச்சரிக்கைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது எதிராக வாக்களிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு தேவையானவாறு தீர்மானங்கள் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டால் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும், நாங்கள் சொல்வது கேட்காவிட்டால் நாங்கள் ஏன் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் கட்சி என்ற வகையில் ஸ்திரமான தீர்மானத்தில் நிற்போம் என ரோகித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...