கல்வி அமைச்சர் முக்கிய தகவல்
2030 இல் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,2030 ஆம் ஆண்டளவில்,சீருடைகள் மற்றும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவுகள் போன்ற வசதிகள் முறையாக அதிகரிக்கப்படும்.
அதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி பேணுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718 அதிபர் நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.
மேலும் நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.