இலங்கைசெய்திகள்

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

Share
tamilni 120 scaled
Share

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியமாநாடு இன்று (11.10.2023) கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று(10.10.2023) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மேலும், அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வகைத்தந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐ.எப்.சி. 31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தலைமையிலான இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வந்து ஜெய்சங்கர் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...