tamilni 120 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

Share

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியமாநாடு இன்று (11.10.2023) கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று(10.10.2023) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மேலும், அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வகைத்தந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐ.எப்.சி. 31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தலைமையிலான இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வந்து ஜெய்சங்கர் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...